முதலமைச்சர் பொது நிவாரண நிதி பற்றிய பொது தகவல்:
முதலமைச்சர் பொது நிவாரண நிதி பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றுகிறது. மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நிதியிலிருந்து பண உதவிகளை சில பல கிழ்கண்ட காரணங்களுக்காக செய்வார்கள்.காரணங்கள் :
- இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டால்
- சாதி கலவரங்களால் பாதிக்கப்பட்டால்
- விபத்துக்களால் பாதிக்கப்பட்டால்
- வன விலங்குகளால் பாதிக்கப்பட்டால்
- விலையுறந்த அறுவைசிகிச்சைக்கு
- உடல் ஊனமுற்றோருக்கு
- வாழ வழியில்லாதவாருக்கு
- சேவை நிறுவனங்களுக்கு
- ஏழை மாணவ மாணவியர் கல்விக்கு
- மற்றும் பல முடியாதவர்களுக்கு
மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிப் பற்றி அறிய : இங்கே சொடுக்கவும்
சரி, இப்போ இந்த நிதி எல்லாம் யாரு கொடுக்குக்காங்க ? எல்லாம் பொது சனங்கள் தான்.. அவங்களுக்கு வரி சலுகைகள் உண்டு.. இப்போ, இந்த நிவாரண நிதியிலிருந்து ஒருத்தருக்கு நிதி உதவி பண்ணனுமுனா, அவங்க கண்டிப்பா பாதிக்கப் பட்டு வாழவே முடியாத நிலமையிலிருக்கணும்.. அதை அந்த ஊரு ஆட்சியர் உறுதி செய்யனும்..
ஆமா, இதை எல்லாம் ஏன் நான் இன்னைக்கு சொல்லுறேனு பாக்குறீங்களா ?
முதலமைச்சர் நிதியுதவி நல்லாவே செய்யுறாங்க.. நேத்து கூட நம்ம "பச்ச கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டில்" கட்டிய வரலட்சுமிக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி செஞ்சுறுக்காங்க.. வேண்டாமுனு யாரு சொன்னா.. நன்னா செய்யட்டும்.. சினிமாகறங்கல்லாம் தைரியலட்சுமினு புகழட்டும்.. ஆனா, நம்ம சூர்யசக்ரா சாமிகண்ணுக்கும் செய்யட்டும்.. அவரும் பாதிக்கப்பட்டவர் தானே.. அது தான் நம்ம கேள்வி.. இதை யாரு போயி அந்த அம்மாக்கிட்டே சொல்லுறது ? பூனைக்கு யாரு மணி கட்டுறது ?
பின் குறிப்பு: சுனாமியில் வாழ்விழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்பது நம் முதல்வரின் வாதம்..
1 comment:
முதல் பின்னோட்டம் நமதாகட்டும்..
ஆமா, இந்த காஞ்சி பிலிம்ஸ் இன்னும் ஒரு முகவரி தாறேன் சொன்னாரே ? என்னாச்சு..
சரி.. நம்மளே கண்டுபுடிக்களாம்.. வலைப்பூ மக்களே, உங்களுக்கு அந்த சூர்யசக்ரா சாமிகண்ணு முகவரி கிடைத்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்..
இந்த ஊருல பூனைக்கு மணி எல்லாம் கட்ட மாட்டுக்காங்க..
Post a Comment