Monday, July 18, 2005

தமிழர் வாழ்க்கையில் ...

எழில்நிலாவிலிருந்து சில தகவல்களை சுட்டுடேன்..

ஆமா, எதுக்கு சுட்டதுனு கேட்டகலையே.. கொஞ்ச நாளுக்கு முன்னால.. ஓயிங்ங்க்.... (கொசுவத்தி சுத்திக்கோங்க உங்க முன்னாடி.. பிளாஷ்பேக்-ப்பா..) நம்ம வலைபதிவுகளில் ஒரு சுவராசியமான ஒரு காரசாரமான விவாதம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது (அந்த பின்னோட்டம் மேட்டரில்லைங்கோ..) .. அதாவது பெண்களுக்கு தாலி ஒரு வேலியா ? இல்லை ஒரு அணிகலணா ? எகப்பட்ட கருத்துகள்.. இந்த தாலி எல்லாம் ஒரு பெண்ணை அடிமைப் படுத்துவற்கு, பெண்ணுரிமை, பெண்ணடிம, பெண்ணத்திக்கம்..சாரி ஆண்ணாத்திக்கம்.. அப்படி இப்படினு.. ஆனா, அந்த மாதிரி ஒரு விசயமில்லை, நிறைய விசயங்கள் நம்ம முன்னோர்கள் வைச்சுருக்காங்க.. ஆனா என்னா, எதுக்கு சொல்லாம வைச்சுட்டாங்க.. சொன்ன இந்த பயலுக கேக்க மாட்டாங்குனு தானா தெரியலை.. அதுல சில தான் கீழே நம்ம சுட்ட விசயம்..

இந்த கீழ்வரும் தகவல்கள் எழில்நிலாவிலிருந்து சுட்டது:

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.

நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

மெட்டி:

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப் பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]

ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை
நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி
அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு:

கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.

பொதுவாக, உடல் ரிதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. [சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும்
என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]

அரைநாண் கொடி[அரணாக்கொடி]:

அரைநாண் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்க்கொடி உடல்
பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.

இதர விசயங்கள்:

மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,

பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.

இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.


தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):-

1. தலையணி:
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி:
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.

3. கழுத்தணிகள்:
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள்:
கொந்திக்காய்.

5. கை அணிகலன்:
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.

6. கைவிரல் அணிகலன்கள்:
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.

7. கால் அணிகலன்கள்:
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.

8. கால்விரல் அணிகள்:
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.

9. ஆண்களின் அணிகலன்கள்:
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,
பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.

(குறிப்பு உதவி)..நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன், எழில்நிலா)

ஓம்..ஹீரீம்..

ஓம்..ஹீரீம்.. ஹாம்ம்ம்.. சூ மந்திரகாளி..

என்ன மக்களே, என்னாடா சொல்லவாரானு பாக்கிறீங்களா? நேத்து தான் நம்ம ஹாரி போட்டர் நாவல் படிச்சேன்.. அந்த விளைவுகள் தான் இது.. ஒரு தம்-ல உக்காந்து படிச்சு முடிச்சுட்டேன்..

கதை நல்ல கதை தான். சிறுவர் சிறுமிக்களுக்குள்ள மந்திர தந்திர கத.. நம்ம ஏன் படிக்கனும் நினைச்சுட்டு இருந்த போது தான் அந்த முதல் திரைப்படம் வந்தது... உடனே மட மட னு எல்லா புத்தகங்களையும் படிச்சு முடிச்சுட்டு, இப்ப வெளியான புத்தகதிற்காக காத்திருக்க தொடங்கினேன்.. ஒரு வழியா இந்த புத்தகம் வந்திட்டு.. என்னா, இப்போ அடுத்த புத்தகத்திற்கு வெட்டிங்.. ஆனா அடுத்த புத்தகம் தான் இந்த தொடரில் கடைசி.. ஆகவே ஒரு தொடர் புத்தகம் படிப்பு முடிந்த்தது.. கண்டிப்பா நம்ம குழுந்தைகள் காலத்தில்ஹ் இந்த ஹாரி போட்டர் ஒரு வரலாறு சின்னம் தான்.
சரி இந்த புத்தகத்தை பற்றி ஏற்கனவே நிறைய பேர் வலைபதிவில் எழுதிட்டாங்க.. ஒரு அண்ணாச்சி சஸ்பஃன்ஸ வேற உடைத்துவிட்டார்.. ஆகவே, நம்ம இந்த புத்தக விமர்சனத்திற்கு வராமல், இந்த புத்தகத்தை அம்மணி எப்படி எல்லாம் ரசிச்சு எழுதிருக்கானு பாக்கலாம்..


1. யாரை யாரையும் சேர்த்து வைத்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று

2. யாரை போட்டு தள்ளுனா, அடுத்த நாவலில் ஹாரி பெரிய ஆளா காண்பிக்க முடியும் என்று

3. யாரை மக்கள் அந்த அரை இரத்த இளவரசனா நினைக்க மாட்டாங்க என்று
இப்படி ஏகப்பட்ட ரசிக்க தகுந்த வகையில்..
அப்புறம் அடுத்த நாவலுக்கு இன்னும் கொஞ்சம் மவுசு ஏத்திவிட்டாங்க..

1. யார் அந்த ஆர். ஏ. பீ (R A B)?

2. ஹாக்வேர்ட் (Hogwarts) திறக்குமா ?

3. ஹாரி திறந்தாலும் பள்ளிக்கு வந்து பட்டம் பெறுவானா ?

4. அந்த ஆறாவது கோரோகர்ஸ் என்னா ?

5. ஒரு வேளை ஹாரி சாகுவானா, இல்லை அந்த வால்டமார்ட் (நான் இந்த பெயரை சொல்ல பயப்படலை.. அப்படினா நான் யாராயிருப்பேன்??)


எப்படியோ இன்னும் இரண்டு வருடத்தில் எனக்கு இன்னொரு 30$ செலவு.. அவ்வளவு தான்.


என்ன மனசுல ஒரு சின்ன வருத்தம். அப்படி நம்ம விட்டலாசார்யா கதையே இந்த ரோலிங்க் அம்மணி பல கோடி காசாக்கிட்டேனு தான்..அதே ஏழு மலை ஏழு கடல் தாண்டி மந்திரவாதி எப்படி தான் உயிரை ஒரு சின்ன பூக்குள்ளே உள்ள ஒரு சின்ன வண்டில் வைப்பானே அதே மாதிரி தான் இந்த மந்திரவாதியும். சே.. நம்ம patent வாங்கிருக்கனும்..

Friday, June 24, 2005

ஒரோன்னு ஒன்னு

தி ஒன் -

ஒரோன்னு ஒன்னு
இரோன்னு இரண்டு
.
.
.
.
இப்படி போன எவ்வளவு நானாலும் வாய்ப்பாடு சொல்லலாம்.. சரி மேட்டருக்கு வருவோம்..இன்னைக்கு தொலைகாட்சியிலே ஒரு விளம்பரம். நம்ம ஹாலியுட் நடிக நடிகைகள், அப்றம் நம்ம மண்டேலா அவங்க எல்லாம் 'ஒன்' 'ஒன்' அப்படினு வாய்ப்பாடு சொல்லிட்டுயிருந்தாங்க.. என்னடா அப்படினு பாத்த, கட்ட கடைசில ஒரு இணைய பக்க முகவரி கொடுத்துட்டாங்க.. http://www.one.org

உலக எய்ட்ஸ் மற்றும் வறுமை ஒழிப்பு கையெழுத்து வேட்டை.. நீங்களும் உங்கள் கையெழுத்து அல்லது கைநாட்டை வைக்கங்கள்.

Wednesday, June 15, 2005

மீமீ.. மீமீ.. புத்தக மீமீ..

என்ன நண்பர்களே, நம்ம விஜிக்கு (அல்வாசிட்டி விஜயை இப்படி தான் கூப்பிடுவேன்) ஒரு நன்றி சொல்லிருவோம்.. ஆனா, நான் இந்த ஆட்டைக்கு வரலே.. ஏன் பாக்குறியா ? வேறும் ஒரு அஞ்சு கேள்விதானே இந்த புத்தக மீமீ.. (மீமீ ஒரு சீன பெண் எங்க அலுவலகத்திலிருந்தா.. அவ ஞாபகம் தான் வருது).சரி நம்ம இந்த புத்தக மீமீயில் கேக்காத பல கேள்விகளுக்கும்
விடையளிச்சுறுவோம்..


பிடித்த சஞ்சிகைகள்:
விகடன் குடும்ப சஞ்சிகைகள்
துக்ளக்
நக்கீரன்
கல்கி
ஒரு பேப்பர் (இணைய சஞ்சிகை) (நண்பர்களே, கண்டிப்பாக வாசியுங்கள்.. )

தமிழ் புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :
கடல் புறா, யுவனராணி - சாண்டியன்
பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் - கல்கி
உடையார், அப்பா, கிருஷ்ன அர்ச்சுனன் - பாலகுமாரன்
அக்னி சிறகுகள் - அப்துல்கலாம்
வந்தார்கள், வென்றார்கள் - மதன்
உதிரிபூக்கள் (கதை வசனம்) - மகேந்திரன்
கோட்டைபுரத்து வீடு - இந்திரா செளந்திராஜன்
மனம் மலரட்டும் - சுவாமி சுகபோகனந்தா

தமிழ் கவிதைத் தொகுப்புகள் படித்ததில் மிகவும் பிடித்தது :
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் (மதுரை தொகுப்புகளின் மின்பதிப்பு)
வைரமுத்து கவிதைத் தொகுப்பு
பா. விஜயின் - உடைந்த நிலா
புதுவை ரத்தினதுரையின் - உணர்ச்சி வரிகள் (PDF from web)

முதலில் படித்த ஆங்கில நாவல்:
The Almighty - Irvine Wallace

ஆங்கில நாவல்கள், புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :
Not a penny More, Not a penny Less - Jeffrey Archer
Master of Game, If tommorow Comes - Sidney Sheldon
Icon, Negogiator - Fredrick Forsyth
Patriot Games - Tom Clancy
Harry Potter & Globet of Fire - J K Rowling
Face off - Emma Brooks


திரும்ப திரும்ப படிக்கும் புத்தகங்கள்:
திருக்குறள் - தமிழன் பண்பாட்டு கையேடு
பொன்னியின் செல்வன்
கடல் புறா
அவ்வையின் அமுத மொழிகள்
குடும்ப விளக்கு

படிக்க நினைத்த புத்தகங்கள்:
சத்திய சோதனை - மகாத்மா
தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி
மோகமுள் - தி. ஜானகிராமன்

படிக்க காத்திருக்கும் புத்தங்கள்:
Harry potter & The Half blood Prince - JK Rowling (Reserved @ borders already)
Da Vinci Code
தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி

சரி சரி.. நம்ம இந்த புத்தக மீமீ விளையாட்டுக்கான விடைகளை கொடுத்துறுவோம்..

சொந்த புத்தகங்கள் : 30+ சுட்ட புத்தகங்கள் : 30+
விலைக்கு வாங்கிய கடைசி புத்தகம்: The Red Sun Rising - Tom Clancy விலை : 50 யூ.எஸ் செண்ட்
படித்ததில் கடைசி (இன்னைக்கு காலையில்): தி டித் ஆப் டைகர்
ஐப்பெரும் புத்தகங்கள் : பொன்னியின் செல்வன், கடல்புறா, யுவனராணி, அக்னிசிறகுகள், திருக்குறள்-தமிழன பண்பாட்டு கையேடு
செம்மறி ஆட்டுக் கூட்டம், என் அப்பால் தொடர :
அருணாச்சலம், ஜேம்ஸ்ராஜ், கணேசஷ் பாலுறு, செல்வராசன், மரு. நடராசன் (யாருக்கு வலைபூக்களில்லை)

ஆமா, இந்த பதிவை அல்வாசிட்டியில் போடவா, இல்லை என்னோட இன்னொரு பிளாக்கில் போடாவா-னு ரொம்ப யோசனை.. அடே, கட் அண்ட் பேஸ்ட் தானே.. இரண்டு இடத்திலும் போட்டுறுவோம்.. என்னா நான் சொல்லுறது..

அடுத்து நம்ம சினிமா சீசீ அரம்பிச்சுரலாமா ?



Tuesday, June 07, 2005

பூனைக்கு யாரு மணி கட்டுறது ?

முதலமைச்சர் பொது நிவாரண நிதி பற்றிய பொது தகவல்:

முதலமைச்சர் பொது நிவாரண நிதி பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றுகிறது. மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நிதியிலிருந்து பண உதவிகளை சில பல கிழ்கண்ட காரணங்களுக்காக செய்வார்கள்.காரணங்கள் :


  1. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டால்

  2. சாதி கலவரங்களால் பாதிக்கப்பட்டால்

  3. விபத்துக்களால் பாதிக்கப்பட்டால்

  4. வன விலங்குகளால் பாதிக்கப்பட்டால்

  5. விலையுறந்த அறுவைசிகிச்சைக்கு

  6. உடல் ஊனமுற்றோருக்கு

  7. வாழ வழியில்லாதவாருக்கு

  8. சேவை நிறுவனங்களுக்கு

  9. ஏழை மாணவ மாணவியர் கல்விக்கு

  10. மற்றும் பல முடியாதவர்களுக்கு


மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிப் பற்றி அறிய : இங்கே சொடுக்கவும்

சரி, இப்போ இந்த நிதி எல்லாம் யாரு கொடுக்குக்காங்க ? எல்லாம் பொது சனங்கள் தான்.. அவங்களுக்கு வரி சலுகைகள் உண்டு.. இப்போ, இந்த நிவாரண நிதியிலிருந்து ஒருத்தருக்கு நிதி உதவி பண்ணனுமுனா, அவங்க கண்டிப்பா பாதிக்கப் பட்டு வாழவே முடியாத நிலமையிலிருக்கணும்.. அதை அந்த ஊரு ஆட்சியர் உறுதி செய்யனும்..

ஆமா, இதை எல்லாம் ஏன் நான் இன்னைக்கு சொல்லுறேனு பாக்குறீங்களா ?

முதலமைச்சர் நிதியுதவி நல்லாவே செய்யுறாங்க.. நேத்து கூட நம்ம "பச்ச கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டில்" கட்டிய வரலட்சுமிக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி செஞ்சுறுக்காங்க.. வேண்டாமுனு யாரு சொன்னா.. நன்னா செய்யட்டும்.. சினிமாகறங்கல்லாம் தைரியலட்சுமினு புகழட்டும்.. ஆனா, நம்ம சூர்யசக்ரா சாமிகண்ணுக்கும் செய்யட்டும்.. அவரும் பாதிக்கப்பட்டவர் தானே.. அது தான் நம்ம கேள்வி.. இதை யாரு போயி அந்த அம்மாக்கிட்டே சொல்லுறது ? பூனைக்கு யாரு மணி கட்டுறது ?

பின் குறிப்பு: சுனாமியில் வாழ்விழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்பது நம் முதல்வரின் வாதம்..

Wednesday, June 01, 2005

அன்புள்ள தமிழ்மன வலைப்பதிவின் வாசகர்களே

அன்புள்ள தமிழ்மன வலைப்பதிவின் வாசகர்களே,
இதர வலைபதிவின் வாசகர்களே,

எங்கே போச்சு உங்கள் பேச்சு. நம்மவூரு மரத்தடி பேச்சு தானா இந்த வலைபதிவு பேச்சுக்கள் ? இல்லை மரத்தடி.காம் என்பது உன்மை தானா ?
இன்று எதர்ச்சயாக காஞ்சி பிலிம்ஸ் வலைபதிப்பு பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு பதிப்பில் நண்பரின் "சூர்யசக்ரா சாமிகண்ணு" "சூர்யசக்ரா சாமிகண்ணு". அதை படித்த வாசகர்கள் எத்தனைபேர் என்று தெரியாது.. ஆனால் பின்னோட்டம் விட்டவர்கள் வேகு சிலரே.. ஏன் ? அதில் அவர் கடைசியாக் ஒரு கேள்வி கேட்டுருக்கீறார்..

"இந்த வீரலட்சுமிக்கும் பிள்ளைகளுக்கும் ஏதாவது நம்மால் உதவி செய்யமுடியுமா தமிழ்மணம் அன்பர்களே ? "

தமிழ்மனத்தில் ஒரு வேளை அன்பர்கள் இல்லையா ?
இல்லை இது தமிழ் மனம் இல்லையா ?
இல்லை இங்கு மனங்களேயில்லையா ?

காஞ்சி பிலிம்ஸின் மற்ற பதிப்புகள் வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாமல், ஆனால் சூர்யசக்ரா சாமிகண்ணு போன்ற பதிப்புகளுக்கு நீங்கள் பண உதவி பண்ணாவிட்டால் கூட அவர் கருத்துக்கு பதில் சொல்லிருக்கலாம்..

என்னவே போல ஆகிவிட்டது.. இவ்வளவுதானா உலகம்.. பேச்சு வேறு செயல் வேறு என்பது அரசியல்வியாதிகளுக்கு மட்டுமல்ல, நமக்குக்கும் தான் என்று இந்த வாசக சமுதாயம் சொல்லாமல் சொல்லிவிட்டது...

Tuesday, May 31, 2005

மூணு நாளா ...

வணக்கம் என் இனிய மக்களே, உங்களுக்கு பழக்கமுள்ள இந்த சங்கர் மீண்டும் எழுத வந்துள்ளேன்.. டேய்ய்ய்ய்ய்.. எங்கடா நேத்து இரண்டு பேரு எழுதுங்கனு சொன்னா ? எழுத அரம்பிச்சுரதா ? அப்பிடினு யாராச்சும் சொல்லுரதுக்குள்ளே, எழுதி முடிச்சுரலாம்..

கடந்த மூணு நாளா நல்ல தூக்கம்.. எனக்கு பிடிச்ச பொழுதுபோக்கே தூக்கம் தான்.. ஆமா, தூங்குனா பொழுது போகுதுலா..


என்ன, செலவே கிடையாது இந்த பொழுதுபோக்குக்கு.. எந்த போக்குவரத்தும் வேண்டாம்.. எந்த துணையிம் வேண்டாம்.. வேண்டுமானால் அந்த துணையை தூக்கத்தில் அழைச்சுக்கலாம், அணைச்சுகலாம், அடிச்சுக்கலாம்.. கலாம்..லாம்.. ம்ம்ம்ம்ம்..


தூக்கம் ஒரு விதத்தில் மருந்து தான்.. ஆனா அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.. ஆகவே இடையில் கொஞ்ச நேரமாவது முழிச்சுருக்க வேண்டும். வேணா, அந்த நேரத்தில் பல் தோய்க்கிறதோ, சாப்பிடுறதோ செஞ்சுகலாம்.. குளிச்சுர கூடாது.. அப்புறம் தூக்க கெட்டுறும்..


தூக்கமே வரதாபோது, கொஞ்சம்காட்டி புக் படிச்சுசேன்.. பேஃடிரிக் போர்சித்-னு ஒரு ஆசிரியரோட 'நிகோசியேட்டர்' அப்படினு ஒரு உளவாளி கதை.. நல்லா எழுதிருக்காருப்பா.. முந்தில்லாம், நம்ம ராஜேஷ்குமார் நாவல் தான் படிப்பேன்.. இவரு அவருக்கொல்லாம் தாத்தா.. பின்னியெடுத்துட்டார்.. கதையை சொல்லிருல்லாம், ஆனா நம்ம மக்கள் படிக்கனும் நினைச்ச, பின்னே சஸ்பன்ஸ் போயிறும்.. அந்த கதை படிச்சு முடிச்சுட்டு இப்ப இன்னொரு கதை 'ஐகான்' படிச்சுட்டுயிருக்கேன்.. தமிழில் இந்த கதையொல்லாம் காப்பியடிக்கனும்..
பாக்கலாம்..


அப்புறம் 'The Serious of Unfortunate Events' & 'Taxi' படங்கள் பாத்தேன்.. அவ்வளவு
தான்பா.. மூணு நாளு பறந்தேபோச்சு.. முக்கா முக்கா மூணே நாளுதான் போ..
இந்த கேப்பில் ஒரு அருமையான பாடல் ஒன்று கேட்டேன்.. உடனே ஊருக்கு போன் அடிச்சு பொண்டாட்டிக்கிட்டே உன்னை தாண்டி நினைச்சேனு சொல்லி ஒரு ஐஸ் மழை..

பாடல் கீழே..
படம் : புவனா ஒரு கேள்விகுறி

இசை : டாக்டர் இசைஞானி இளையராஜா

பாடியவர் : எஸ். பி. பாலா

பாடல் :

விழியிலே மலர்ந்தது, உயிரிலே கலந்ததது

பெண்ணெனும் பொன்னழகே அடாடா எங்கொங்கும் உன்னழகே

அடாடா எங்கொங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும்

புது உலகின் வழி தெரியும் பொன் விளக்கே தீபமே..

(விழியிலே...)

ஒவியனும் வரைந்ததில்லையே உன்னைபோல்

ஓரழகைக் கண்டத்தில்லையே

காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி

கண்களுக்கு விளையந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

(விழியிலே...)
கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகைமுன்னழகில் காமினி பின்னழகில் மோகினி

மோகவலை சூடும் நேரமே யோகம் வர பாடும் ராகமே..

(விழியிலே...)


நாளை சந்திப்போம்..


Friday, May 27, 2005

நினைவு நாள் - நிதியுதவி நாள்

அப்புறம் மக்களே, வணக்கம். இந்த வாரயிறுதி ஒரு நீள வாரயிறுதியாம் (Long Weekend) இந்த ஊரில்.. ஒரு மூணு நாள் சேர்ந்தாப்புல லீவு விட்டுடா போதுமடா சாமி.. பெட்ரோல் விலைய கூட கூட்டிங்கனா பாத்துக்கொங்களேன்.. என்னடா நீண்ட வாரயிறுதினு கேட்டா, நினைவு தினமாம் (Memorial Day). யாருக்குடானேன் ? ஏன்னா நம்ம ஊருல யாராவது தலைவருகளுக்கு தான் நினைவு தினம் கொண்டாடுவோம். அமெரிக்காவுக்காக பல போர்களில் கலந்துகிட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துர நினைவு தினமுனு சொன்னான் நம்ம பக்கத்து சீட்டுக்காரன்..


ஆகா, நம்ம ஊருல இப்படி கொண்டாடுனா நல்லாயிருக்குமேனு நினைச்சுகிட்டே, குமுதம் புத்தகத்தை இணைய வழி படிக்க ஆரம்பிச்சேன். எடுத்த உடனே கண்ல பட்டது நம்ம வட நாட்டு பெண் அரசியல்வாதி ஒருத்தர் தான் பிறந்தநாளை 'நிதியுதவி தினமாக' கொண்டாட செல்லி தான் தொண்டர்களுக்கெல்லாம் கட்டளையிட்டது தான்.. ஆகா, பிறந்தநாளில் இந்த அம்மணி நிறைய நிதியுதவி எல்லாம் செய்ய போறங்க.. அதான் நிதியுதவி தினமா அறிவிச்சுருக்கனும். ஆனா பாரு பாவி அடிச்சலே பலே பல்டி, அது அவங்க நிதியுதவி பண்ணுற தினமில்லையாம்.. அவங்களுக்கு எல்லாரும் நிதியுதவி பண்ணுற தினமாம்.. அந்த பணத்தில் அவங்க கட்சி வளர்க்க போறாங்களாம். (இவங்களும், இவங்க குடும்பத்தாரும் நல்ல வளர்ந்துட்டாங்க.. )

Thursday, May 26, 2005

தமிழில் எழுத கடின முயற்சி..

ஆஹா.. என்ன ஒரு வரவேற்பு.. நிறைய பின்னோட்டங்கள் வந்து விழுந்துட்டு ...

ஆன என் மனைவி என்ன சொன்னா தெரியுமா ? பின்னொட்டம் வர முன்னாடி நீங்கள் உங்க வலைபதிப்பில் எழுத்து பிழையிருக்கா-னு ஒரு முன்னோட்டம் விடுங்கனு..

ஆமா நான் என்னா பரிட்சையா எழுத போறேன், பிழையிருக்கானு பாக்க. ஏதோ மனசில தோணுறதை அப்படி ஒரு பதிப்பா போட்ட நம்ம சனங்கள் எல்லாம் படிப்பங்க.. அவங்களுக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவமிருந்துருக்கலாம், அதுகூட ஞாபகம் வரலாம்.. எல்லாம் ஒரு பொழுதுபோக்குதானே.. (டியம் பாஸ்-னு, எழுதலாமுனு நினைச்சேன், அப்புறம் முடிஞ்சளவு தமிழில் எழுதுவோமேனு முயற்சி பண்ணுறேன்)

ஆன ஒன்னு மட்டும் உறுதி.. இந்த வலைபதிவில் எழுத ஆரம்பிச்சதிலிருந்து தமிழில் நான் எழுதி பல நாளாச்சினு நல்லாவே தெரியுது எனக்கு.. பத்தாப்பு படிக்கும் போது நான் தமிழ் மன்றத் தேர்வுல இரண்டாவது மார்க் மாநிலத்தில. நேர கொடுமைடா சாமி..

தமிழில் எழுதுறதுக்கு நமக்கே (சாரி எனக்கே) இவ்வளவு கஷ்டமாயிருக்கே, நம் பிள்ளைங் என்னா பண்ண போதோ தெரியலை.. எதாவது பண்ணா வேண்டாமா சனங்களே ? அதுக்கு தான் இந்த வலைபதிப்பு முயற்சியில் இறங்கியுள்ளேன்.. முதல என் தமிழ் எழுத்து பயிற்சிய வளர்த்துட்டு, என் பையன் தமிழுக்கு (ஆமா மக்களே, என் பையன் பேரு தமிழரசு, செல்லமா தமிழ் தமிழ்-னு கூப்பிடுவோம்) தமிழ் எழுத்து பயிற்சி கொடுக்கனும்..

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள

டென்சன் (தமிழ என்னாப்பா ??) ஆகாதீர்கள் மக்களே.. சும்மா ஞாபகப் படுத்தி பார்த்தேன்..

மீண்டும் மீண்டும் வருவேன்...

எழுதிட்டுயிருக்கும் போது ஆனந்த விகடனில் படிச்ச ஒரு சிரிப்பு ஞாபகம் வந்தது..
--------------------------------------------------
ஒருவர் : "தலைவரோட அரசியல் எதிர்காலமே இருண்டுடுமோனு பயமா இருக்குதா.. ஏன் ? "
மற்றொருவர் : "எல்லாப் படங்களுக்கும் சினிமாக்காரர்களே தமிழில் பெயர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்களே !!!

--------------------------------------------------

இப்படி எல்லாரும் தமிழுக்கு மாறிட்ட நம்ம அரசியல்வாதிகளுக்கு மொழி போராட்டம் நடத்துற வேலை கொஞ்சம் மிச்சம்..

என்றும் அன்புடன்
சங்கர்....

Wednesday, May 25, 2005

என்னடா எழுதுறது ?

அம்மா தாயே, எல்லாம் வல்ல ஆதி பராசக்தியே எல்லாரும் நல்லாயிருக்கனும் தாயே.. .

எப்பா, முதல் இரண்டு வரி எழுதியாச்சு.. வேற என்ன எழுதலாம்.. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வாழ்க்கைய பத்தி எழுதலாமா ? ஆமா, நம்ம பெரிய காந்தி, சுயசரிதையா எழுத போறோமுனு ஒரு குரல் உள்ளேயிருந்து.. எழுதுனா தான் என்னானு இன்னொரு குரல்..

எல்.கே.ஜி பள்ளி போனன்னைக்கு சருக்கு விளையாண்டு டவுசரை ஒட்டை போடத்தை எழுதவா ? இல்லை பள்ளி முடிஞ்சு எல்லாரும் வீட்டு போகும் போது னான் மட்டும் போக மாட்டேன் அடம்பிடிச்சைதை எழுதவா ?

யூ.கே.ஜி பள்ளியில் டவுசரில் ஆய் போயி ஆயாவிடம் அடி வாங்கியதை எழுதவா ? இல்லை அனுகிட்ட பாம்பு மாதிரி கை வச்சு குச்சி மிரட்டி வாங்கியதை எழுதவா ?

டேய்... டேய்... .. நிப்பாட்டு.. இதை எல்லாம் எதுக்கு எழுதனும் ? ஒரு அண்ணாச்சி அவரு வலைப்பதிவில் சொன்ன மாதிரி எழுதனுமேனு எழுதுறியா ? இல்ல ஆனந்த விகடனில் எழுதவிடலேனு எழுதுறியா ?

இப்படி எனக்குள்ளே ஆயிரம் கேள்வி ? (டேய்ய்ய்ய்.. என்னடா ஒரு ஆறு கேள்வி தானேயிருக்கு, அதுகுள்ளே ஆயிரம் கேள்விண்டே ?? )

ஏதோ மக்களே.. எதாவது எழுதுனுமுனு முடிவேடுத்தாச்சு.. நீங்க தான் அனுசரிச்சு போகனும்..

மீண்டும்.. எதாவது எழுத்திட்டு வரேன்...

என்றும் அன்புடன்
சங்கர்..