Tuesday, May 31, 2005

மூணு நாளா ...

வணக்கம் என் இனிய மக்களே, உங்களுக்கு பழக்கமுள்ள இந்த சங்கர் மீண்டும் எழுத வந்துள்ளேன்.. டேய்ய்ய்ய்ய்.. எங்கடா நேத்து இரண்டு பேரு எழுதுங்கனு சொன்னா ? எழுத அரம்பிச்சுரதா ? அப்பிடினு யாராச்சும் சொல்லுரதுக்குள்ளே, எழுதி முடிச்சுரலாம்..

கடந்த மூணு நாளா நல்ல தூக்கம்.. எனக்கு பிடிச்ச பொழுதுபோக்கே தூக்கம் தான்.. ஆமா, தூங்குனா பொழுது போகுதுலா..


என்ன, செலவே கிடையாது இந்த பொழுதுபோக்குக்கு.. எந்த போக்குவரத்தும் வேண்டாம்.. எந்த துணையிம் வேண்டாம்.. வேண்டுமானால் அந்த துணையை தூக்கத்தில் அழைச்சுக்கலாம், அணைச்சுகலாம், அடிச்சுக்கலாம்.. கலாம்..லாம்.. ம்ம்ம்ம்ம்..


தூக்கம் ஒரு விதத்தில் மருந்து தான்.. ஆனா அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.. ஆகவே இடையில் கொஞ்ச நேரமாவது முழிச்சுருக்க வேண்டும். வேணா, அந்த நேரத்தில் பல் தோய்க்கிறதோ, சாப்பிடுறதோ செஞ்சுகலாம்.. குளிச்சுர கூடாது.. அப்புறம் தூக்க கெட்டுறும்..


தூக்கமே வரதாபோது, கொஞ்சம்காட்டி புக் படிச்சுசேன்.. பேஃடிரிக் போர்சித்-னு ஒரு ஆசிரியரோட 'நிகோசியேட்டர்' அப்படினு ஒரு உளவாளி கதை.. நல்லா எழுதிருக்காருப்பா.. முந்தில்லாம், நம்ம ராஜேஷ்குமார் நாவல் தான் படிப்பேன்.. இவரு அவருக்கொல்லாம் தாத்தா.. பின்னியெடுத்துட்டார்.. கதையை சொல்லிருல்லாம், ஆனா நம்ம மக்கள் படிக்கனும் நினைச்ச, பின்னே சஸ்பன்ஸ் போயிறும்.. அந்த கதை படிச்சு முடிச்சுட்டு இப்ப இன்னொரு கதை 'ஐகான்' படிச்சுட்டுயிருக்கேன்.. தமிழில் இந்த கதையொல்லாம் காப்பியடிக்கனும்..
பாக்கலாம்..


அப்புறம் 'The Serious of Unfortunate Events' & 'Taxi' படங்கள் பாத்தேன்.. அவ்வளவு
தான்பா.. மூணு நாளு பறந்தேபோச்சு.. முக்கா முக்கா மூணே நாளுதான் போ..
இந்த கேப்பில் ஒரு அருமையான பாடல் ஒன்று கேட்டேன்.. உடனே ஊருக்கு போன் அடிச்சு பொண்டாட்டிக்கிட்டே உன்னை தாண்டி நினைச்சேனு சொல்லி ஒரு ஐஸ் மழை..

பாடல் கீழே..
படம் : புவனா ஒரு கேள்விகுறி

இசை : டாக்டர் இசைஞானி இளையராஜா

பாடியவர் : எஸ். பி. பாலா

பாடல் :

விழியிலே மலர்ந்தது, உயிரிலே கலந்ததது

பெண்ணெனும் பொன்னழகே அடாடா எங்கொங்கும் உன்னழகே

அடாடா எங்கொங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும்

புது உலகின் வழி தெரியும் பொன் விளக்கே தீபமே..

(விழியிலே...)

ஒவியனும் வரைந்ததில்லையே உன்னைபோல்

ஓரழகைக் கண்டத்தில்லையே

காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி

கண்களுக்கு விளையந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

(விழியிலே...)
கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகைமுன்னழகில் காமினி பின்னழகில் மோகினி

மோகவலை சூடும் நேரமே யோகம் வர பாடும் ராகமே..

(விழியிலே...)


நாளை சந்திப்போம்..


2 comments:

ஜெ. ராம்கி said...

பாரதியின் குயில்பாட்டிலிருந்து உருவியது மாதிரியான மெலடி மெட்டு. ஏன்தான் எல்லா சானலும் இந்தப்பாட்டை புறக்கணிக்குதே.. தெரியவில்லை!

Online Security Tips and Tricks for Kids said...

இப்போ எல்லாம் எங்கே இந்த மாதிரி பாட்டு கேக்குறாங்க.. எல்லாம் கும்பிடபோன தெய்வம் தான்..